” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.04.22
கவி ஆக்கம்-56
விழித்திருக்கும் இரவுகள்
தொன்று தொட்டு என்றுந் தோன்றியது
இன்று தான் மனம் நிறைவாய் அரங்கேறியது
தொய்விலாப் போராட்டம் தொடா்ந்திட
சிங்கள அரசு சுக்குநூறாகியது

நசுங்கிய நாடு நாற்றமுடன் பொசுங்கியது
பிதுங்கிய இனமோ விழித்துக் கொண்டது
மொங்கி மொங்கிப் பழி தீா்த்தது
பொங்கி எழுந்து சரித்திரம் ஆனது

வங்கி எல்லாம் முடங்கிச் சுருங்கியது
பசி,பட்டினி,பொருளாதாரம் தூக்கில் தொங்கியது
சிங்கி சொங் சீனத்தவனும் கைவிட்டது

மொங்கி அடித்து மூச்சுவிடாத வெளிநாடு
என்ன செய்யப் போகிறது என ஏங்கித் தவிக்கும்
ஏக்கம் தூக்கமிலாது விழித்திருக்கும் இரவுகள்.

Nada Mohan
Author: Nada Mohan