ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

26.04.22
கவி ஆக்கம்-56
விழித்திருக்கும் இரவுகள்
தொன்று தொட்டு என்றுந் தோன்றியது
இன்று தான் மனம் நிறைவாய் அரங்கேறியது
தொய்விலாப் போராட்டம் தொடா்ந்திட
சிங்கள அரசு சுக்குநூறாகியது

நசுங்கிய நாடு நாற்றமுடன் பொசுங்கியது
பிதுங்கிய இனமோ விழித்துக் கொண்டது
மொங்கி மொங்கிப் பழி தீா்த்தது
பொங்கி எழுந்து சரித்திரம் ஆனது

வங்கி எல்லாம் முடங்கிச் சுருங்கியது
பசி,பட்டினி,பொருளாதாரம் தூக்கில் தொங்கியது
சிங்கி சொங் சீனத்தவனும் கைவிட்டது

மொங்கி அடித்து மூச்சுவிடாத வெளிநாடு
என்ன செய்யப் போகிறது என ஏங்கித் தவிக்கும்
ஏக்கம் தூக்கமிலாது விழித்திருக்கும் இரவுகள்.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading