” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

24.05.22
ஆக்கம்-60
காத்திருக்கும் பேரிடி
போரினிலே வென்று புலியைக் கொன்றதென்று
பாரினிலே ஊன்றிய பாவம் சாபமானதோ
தேரினிலே ஏறியவர்மீது தேர்ச்சில்லு ஏறுகிறதே
ஊரினிலே வாழவிடாது உதைத்து சேறு எறிகிறதே

வாழவழியின்றிக் கேள்வி கேட்ட வோட்டுப்
போட்ட இனத்துக்கு வாய்ப்பூட்டு
தன் இனத்துக்கே இந்த நிலை என்றால்
தமிழினத்துக்கு எந்த நிலை

சோழியன் குடும்பி சும்மா ஆடிடுமா
ஐம்பத்தெட்டிலிருந்து அழித்தது மாறிடுமா
தனக்குத் தனக்கு சுளகு படக்குப்படக்கு
சந்திரிகா அம்மா போட்டாவே ஒரு பேட்டி

நடிக்குது நாடகம் துடிக்குது வேடம்
வெடிக்குது சூடம் உயிரைக்
குடிக்கப் போகுது பேரிடி

Nada Mohan
Author: Nada Mohan