” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

07.06.22
ஆக்கம்-61
பழமை
இனிமையிலும் இனிமையானது பழமை
இளமையில் கற்றதை முதுமையானது
அனுபவமாக்கும் வழமை

வறுமையிலும் கொடியது தனிமை
இதனால் தாத்தா,பாட்டி,பிள்ளைகளுடன்
கூட்டுக்குடும்பம் சேர்ந்திருக்கும் உரிமை

பொறுமையிலும் நறுமணமானது கடமை
சிறார் செய்யும் குறும்புகள் இரசித்து
அன்புடன் ஆறுதலாய் அறிவுரைக் கதை
சொல்லி அரவணைக்கும் புதுமை

செந்தமிழ்ச் சுவை கலந்தூட்டும்
சிந்தை இனித்திடும் செவிகளில்
தேன் பாய்ச்சும் பழமொழிகள்,
தத்துவப் பாடல் மனதில் இன்றும்
குளிர்மையாக்கும் பழமையே

Nada Mohan
Author: Nada Mohan