” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

14.06.22
ஆக்கம்-62
பாமுகமே நீ வாழ்க ,வளா்க

அகவை இருபத்தைந்து வெள்ளி விழா
தகவைத் தரும் பாமுகமே! வருக வருக
அழகூட்டும் உன் பணி பூ முகமே
உகவை தந்து மனங்குளிர பாமுக
உறவுகள் முகம் மலர வாழ்த்திட

அன்று நீ காற்றலையில் சிறகடித்து
இலண்டன் தமிழ் வானொலியாய்
ஒலித்து வணக்கம் தமிழ் அலையாய்
விழித்து ஆக்கதாரியில் உருவாக்கம்
உயர்ந்திட பணியாளா் நெஞ்சம்
நிறைந்திடுமே

இயக்குனர் நடா மோகன்,வாணி மோகன்,
இராகவி மோகன் சேவை தொடர
பேரும் புகழும் மிளிர இதே புன்னகையுடன்
பூத்துக் குலுங்கிட இன்னும் பல்லாண்டு
வாழ்க வளர்க எனப் பாராட்டி பாமாலை
எனும் பூமாலையிட்டு வாழ்த்திடுவோமே

Nada Mohan
Author: Nada Mohan