” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

21.06.22
ஆக்கம்-63
மீண்டும் களியாட்டங்கள்
கொண்டாட்ட குதூகலம் மீண்டும் கோலகலமே
கொரோனா கோவிட்டும் விட்டுக் கொடுக்காத கோபமே
கட்டுக் கடங்காதவர் நெஞ்சில் சர்வசாதரணமே
திண்டாட்டம் ஆடியவரோ மூடிய வாயும் மூக்கும்
கரை கண்டது போல் முகமூடி துறந்தாச்சு

வீட்டிலே முடங்கிக் கிடந்த மனமோ
மடங்கிப் போய்ச்சு
நாட்டு நடப்புத் தெரியாமலே மூன்று
வருஷம் கழிச்சாச்சு
உக்கிரைன்,ரஷ்யா போரும்
தொடர்கதையாச்சு

என்னதான் செய்வான் மனிதன்
எதுவந்தாலும் வரட்டுமெனத் துணிந்து
சந்தோஷந்தான் மனதை நிறைவாக்குமென
வேண்டியவர் வேண்டாதவர்க்கு அழைப்பை
விடுத்து களியாட்டத்தில் குதித்தான்

Nada Mohan
Author: Nada Mohan