அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாசலைத் தட்டுகிறது வசந்தம்

பறக்கும் புள்ளினங்கள் பரவசம் கொள்ள
பகலவன் விழிக்க பனிமூட்டம் கலைய
திறக்கிறது வாசலைத் தித்திப்பாய் வசந்தம்
துளிர்கள் மெல்லத் தளிர்விடப் பசுமை

இயற்கையின் பரிமாற்றம் இனிமையைத் தந்திட
எடுத்தாள முடியாது இருண்டபுகை மறைக்க
செயற்கைச் சாதனம் செயல்திறன் பெருக
சுகம்தரும் வசந்தம் சுமையென விழிக்க

காலங்கள் நகருது கலியுகத் திலின்று
கதிகலங்கி மாந்தர் கழித்திடும் வசந்தம்…..

Nada Mohan
Author: Nada Mohan