நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

கரை தெரியுமா உனக்கு

கரை தெரியுமா உனக்கு

கடலுக்கு கரையுண்டு மனதிற்கு கரையில்லை

கடந்தபாதையில் செய்த கடமையும் என்னவோ

விளலுக்கு இறைக்கும் நிலையான கொள்கைகள்

களமாக நின்று கயமமான ஓட்டங்கள்

எங்கே மனிதம் ஏனிந்த ஏமாற்றம்

எந்தவிடத்திலும் நீதிக்கோ பெரும் போராட்டம்

வாழ்வின் பயணம் பாதையும் தெரியாமல்

வதைபட்டு சிதையும் வனிதைகள் எத்தனைபேர்

பதைபதைக்கும் பாவிகள் பருதவிக்கும் சூழ்நிலையில்

கதையெழுதுவார் கண்ணியம் கற்புடமை என்றெல்லாம்

கதாநாயகனை வர்ணிக்கும் அழகிலே மயங்குவார்கள்

கருவைக்கலைக்கும் வாழ்வியலில் வடிக்கும் கண்ணீர்

கலங்கிக் கொள்ளும் காமுகரின் லீலைகள்

கட்டுடல் சீர்குலைய களங்கம் சுமப்பார்கள்
வேலைதேடும் பயணத்தால் வருமே விபரீதங்கள்

கரைகாண வேண்டும் கயமையை அழித்தெறிவதற்கு…

Nada Mohan
Author: Nada Mohan