நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

சாளரத்தின் ஒளியினிலே!

நகுலா சிவநாதன்

சாளரத்தின் ஒளியினிலே!

சாளரத்தின் ஒளியினிலே
சந்தணக்காற்று வீசுகையில்
சாரல் மழையோசையில்
சாதனைகள் தோன்றுதே!

காதல் ராகம் பாடுதே!
கன்னித்தமிழ் மேவுதே!
மோதல் வந்து முத்தமிட
மோகனங்கள் பேசுதே!

தென்றல் வந்து சேதிசொல்ல
தென்னங்கீற்று வாசம் வீச
மன்றம் மகிழும் கிளுகிளுப்பு
மங்கை மனதை மாற்றுதே!

கன்னல்மொழி பேசிடவே
காந்தள் பூவும் மலர்ந்திடவே
பெண்ணே நீயும் பெருமை கொள்ள
பேசாயோ இந்த ஒளியினிலே

கண்ணில் ஒளி தெரிகையிலே
காவியங்கள் பாடுகையில்
கதிரவனின் காலையொளி
களிப்புடனே மயக்குதெம்மை

நகுலா சிவநாதன்1778

Nada Mohan
Author: Nada Mohan