Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-26.04.2022
கவிதை இலக்கம்-172
ஏக்கம்
———–
பூமியிலே பிறப்பே ஏக்கம்
பிறந்து விட்டால்
எப்படி வாழ்வதென ஏக்கம்
இன்றை நிலையில்
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே ஏக்கம்
உலக நாடுகளின் நிலமைகளையிட்டு ஏக்கம்
தொற்று போர் நிலைத்திடுமோ என ஏக்கம்
உயிர்களை நினைத்து ஏக்கம்
தனிமையிட்டு ஒவ்வொரு வினாடியும் ஏக்கம்
விடை காணுமட்டும் கேள்வியில் ஏக்கம்
வாழ்வின் இறுதி நிலைமையிட்டு ஏக்கம்
கடைசியில் சொர்க்கமா நரகமாவென ஏக்கம்
உயிரோடு ஒட்டி விட்ட ஏக்கம்
எப்போதும் எம்மை விட்டு பிரியாத ஏக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading