Jeya Nadesan

கவிதை நேரம்-09.06.2022
கவி இலக்கம்-1524
நிழலாடும் நினைவுகள்
—————————————–
தென் கிழக்கு ஆசியாவின்
முதல் தர நூலகத்திற்கு
இருள் சூழ்ந்த நடு இராத்திரியில்
கூலிப் படையினரால் தீ வைத்து கொழுத்த
எரிந்தவை வெறும் வெற்று தாள்கள் அல்ல
தமிழ் இனத்தின் ஆன்மாவும்
தாவீது அடிகளாரின் உயிருமே
நம் முன்னோர்களின் மூச்சுக்களுமே
சிதைந்த கட்டிடங்கள்
வெறும் கட்டிடங்கள் அல்ல
ஈழ மக்களின் வரலாற்றுப் பெட்டகங்கள்
கல்லடியார் நவாலி புலவர் வீரமா முனிவர்
அழியா சுவடிகள் எரிந்து சாம்பலாயின
யாழ் வரலாற்றின் ஆவணங்கள் அழிந்தன
ஈழநாடு பத்திரிகை காரியாலயம்
கடைகள் தீக்கிரையாகி புகை வானில் கலந்தன
வரலாற்று புகழ்கொண்ட ஆவணங்கள் தீக்கிரையாகின
காலங்கள் மாறினாலும்
கறைபடிந்தத நினைவுகள் மாறாது
அன்று இட்ட பொறிதான்
இன்று கொழுந்து விட்டு எரிகிறது

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading