கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

Jeya Nadesan

கவிதை நேரம்-09.06.2022
கவி இலக்கம்-1524
நிழலாடும் நினைவுகள்
—————————————–
தென் கிழக்கு ஆசியாவின்
முதல் தர நூலகத்திற்கு
இருள் சூழ்ந்த நடு இராத்திரியில்
கூலிப் படையினரால் தீ வைத்து கொழுத்த
எரிந்தவை வெறும் வெற்று தாள்கள் அல்ல
தமிழ் இனத்தின் ஆன்மாவும்
தாவீது அடிகளாரின் உயிருமே
நம் முன்னோர்களின் மூச்சுக்களுமே
சிதைந்த கட்டிடங்கள்
வெறும் கட்டிடங்கள் அல்ல
ஈழ மக்களின் வரலாற்றுப் பெட்டகங்கள்
கல்லடியார் நவாலி புலவர் வீரமா முனிவர்
அழியா சுவடிகள் எரிந்து சாம்பலாயின
யாழ் வரலாற்றின் ஆவணங்கள் அழிந்தன
ஈழநாடு பத்திரிகை காரியாலயம்
கடைகள் தீக்கிரையாகி புகை வானில் கலந்தன
வரலாற்று புகழ்கொண்ட ஆவணங்கள் தீக்கிரையாகின
காலங்கள் மாறினாலும்
கறைபடிந்தத நினைவுகள் மாறாது
அன்று இட்ட பொறிதான்
இன்று கொழுந்து விட்டு எரிகிறது

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading