Selvi Nithianandan

பட்டினி
நாடுகளுக்கிடை பாரிய பஞ்சம்
நலிவடைந்து பலரும் தஞ்சம்
நாணய ஆதிக்கத்தாலே மஞ்சம்
நா நயத்தாலே தீர்த்குதே வஞ்சம்

கொடிய யுத்தம் ஆரம்பம்
கொடூர பசியால் மானிடம்
கொடுங்கோல் ஆட்சி ஒருபுறம்
கொன்று குவிக்கும் மறுபுறம்

சாவினது விழிம்பில் நாடுகள்
சரித்திரம் தேடுது ஆட்சிகள்
சாக்கடை போன்ற கட்சிகள்
சாபமாய் காட்டுதே காட்சிகள்

ஒருசாண் வயிறுக்கு போராட்டம்
ஒருகவளம் உணவின்றி திண்டாட்டம்
ஒத்தாசை கொடுத்து உயிரையும்
ஒற்றுமையாய் காத்து நிற்போமே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading