Selvi Nithianandan

என்ன விதியோ
புதுவருடம் பிறந்தாச்சு
புன்னகையும் தொலைச்சாச்சு
புலம்பலும் தொடராச்சு
புலத்திலே நிலையாச்சு

பணம் என்னும் போராட்டம்
பசி என்ற திண்டாட்டம்
பஞ்சத்தால் பலர்வாழ்வு
தஞ்சத்தால் புலம்பெயர்வு

பள்ளியும் விடுமுறை
படிக்குமா தலைமுறை
பகுதிநேர மின்வெட்டு
பரிவுமற்ற கரண்கட்டு

கற்கையும் கணனிமயம்
கைவிளக்கும் அரங்கேற்றம்
களிப்பற்ற மக்களிடை
கைகொடுக்குமா அரசும்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading